×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே.. இப்படியொரு கொடூர மனைவியா! நள்ளிரவில் கணவரின் மர்ம உறுப்பை நசுக்கி செய்த மோசமான காரியம்! பகீர் சம்பவம்!!

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் எச்.டி வெங்கடராஜு.  இவர் அங்குள்ள கார்ப்பரேஷனில் க

Advertisement

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் எச்.டி வெங்கடராஜு.  இவர் அங்குள்ள கார்ப்பரேஷனில் குரூப் டி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். உமா மற்றும் அவரது கணவருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் உமா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலரான அவினாஷ் என்பவரை சந்தித்துள்ளார்.அதனைத்  தொடர்ந்து இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து உமாவின் கணவருக்குத் தெரிய வந்தநிலையில் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் உமா தனக்கு இடையூறாக இருக்கும் கணவனை காதலருடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் உமா அண்மையில் இரவு கணவருக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்துள்ளார். பிறகு அவரின் மர்ம உறுப்பை நசுக்கி கொலைச் செய்துள்ளார். பின்னர் தனது கணவர் தலைவலி தாங்க முடியாமல் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் கதறி அழுது நாடகமாடி அடக்கம் செய்துள்ளார். ஆனால் இந்த மரணம் குறித்து வெங்கடராஜுவின் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் போலீசார் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் மர்ம உறுப்பை சேதப்படுத்தி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் போலீசார், வெங்கடராஜுவின் மனைவி உமாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story