×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட வாய்ப்புகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வர இதுதான் காரணம்! அனிதா சம்பத் கூறிய காரணம்!

செய்தி வாசிப்பு மற்றும் பட வாய்ப்புகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வந்தது ஏன் என்று விளக்கமளித்துள்ளார் அனிதா சம்பத்.

Advertisement

செய்தி வாசிப்பு மற்றும் பட வாய்ப்புகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வந்தது ஏன் என்று விளக்கமளித்துள்ளார் அனிதா சம்பத்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகிய மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பதினாறு பிரபலங்களுடன் தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக பிரபலமான இவர் சர்க்கார், தர்பார் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அனிதா சம்பத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் செய்திவாசிப்பாளர் மற்றும் சினிமா வாய்ப்புகளை விட்டுவிட்டு அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

இந்நிலையில் செய்தி வாசிப்பது மற்றும் சினிமா வாய்ப்புகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது ஏன் என்பது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் அணித சம்பத்.

"பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை..
.
"உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க"
.
திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்...அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்..
.
கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்!
.
நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..!
.
உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு..
.
அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு..
.
வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல....
.
இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!!
.
எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!!" என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #anitha sampath #Sun tv #vijay tv #Bigg boss Tamil 4 #Promo video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story