தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் வீடு சுடுகாடு ஆகிருச்சே, அனாதை ஆக்கிட்டானே" - மறைந்த விஜே சித்ராவின் தாய் குமுறல்.!

என் வீடு சுடுகாடு ஆகிருச்சே, அனாதை ஆக்கிட்டானே - மறைந்த விஜே சித்ராவின் தாய் குமுறல்.!

  VJ Chitra Mother on Father Kamaraj Demise  Advertisement

என்னை அனாதை ஆகிவிட்டான். என் மகளின் அறையிலேயே, அவளின் துப்பட்டா கொண்டு கணவர் தற்கொலை செய்துகொண்டார். சித்ரா., சித்ரா நான் தனியாக தவிக்கிறேன் என தாய் ஆதங்கப்பட்டு பேசிய காணொளி காண்போரை பதறவைக்கிறது.

ஹேம்நாத் விடுதலை

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு, வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை நடந்த நிலையில், ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அல்லது அதற்கு காரணமாக இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!

காமராஜ் தற்கொலை

மகள் இறந்த துக்கம் தாளாமல் சித்ராவின் தந்தை காமராஜ் (64), தாய் ஆகியோர் சோகத்தில் இருந்து வந்தனர். இதனிடையே, இன்று காமராஜ் தனது வீட்டில், சித்ராவின் அறையிலேயே, அவரது துப்பட்டா கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய் கதறல்

இந்த விஷயம் குறித்து சித்ராவின் தாயார் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "என் ஒரு பொன்னும், இவரும் போயிட்டாங்க. 4 மணிக்கு கூட நான் அவரை பார்த்தேன். 6 மணிக்கு சென்று பார்த்தபோது, சித்ராவின் அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். என் வீடு சுடுகாடு ஆகிவிட்டது, அவன் நல்லா இருப்பானா? என் பொண்ணையும் கொன்றுவிட்டு, என் கணவரையும் கொண்டுவிட்டான். என் வீட்டிற்கு இதுக்குதான் வந்தான் என தெரியவில்லை. சந்தோசமாக இருந்தோம், எங்களின் சந்தோஷத்தை கெடுத்துவிட்டான். நல்லகதி காணுவானா? திருவள்ளூரில் தீர்ப்பு வந்ததும் அவர் மனமுடைந்துவிட்டார்.

அனாதை ஆகிவிட்டான்

அன்றில் இருந்து சாப்பிடாமல் இருந்தார். நானும் தைரியம் சொல்லி பார்த்தும் பலனில்லை. இறுதியில் இப்படி பண்ணிவிட்டார். என்னை அனாதை ஆக்கிவிட்டார். என் பெண் தூணைப்போல, ஆண்பிள்ளை போல இருந்தார். என் பிள்ளையை கூட நம்பாமல், அவனை நம்பினேன். இன்று என்னை அனாதை ஆகிவிட்டான். நான் என்ன சொல்வது? நான் தனியாக நிற்கிறேன். சித்ரா., சித்ரா" என கண்ணீர் மல்க தனது நிலையை வெளிப்படுத்தினார்.

மறைந்த காமராஜ் முன்னாள் காவல் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ நன்றிsunnewstamil

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #Chithra father Kamaraj #VJ Chitra #விஜே சித்ரா #Chithra mother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story