"கமல் தடுக்காவிட்டால் ரஜினி இதை செய்திருப்பார்" நீண்ட வருடத்திற்கு பின்பு வெளிவந்த உண்மை.!?
கமல் தடுக்காவிட்டால் ரஜினி இதை செய்திருப்பார் நீண்ட வருடத்திற்கு பின்பு வெளிவந்த உண்மை.!?
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை இருபெரும் ஜாம்பவான்களாக இருந்து வருபவர்கள் கமல் மற்றும் ரஜினி. இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி பொறாமை என்று ரசிகர்களிடையே பேசிக் கொண்டாலும் அவர்களின் நட்பை பற்றி பலரும் அறிந்த விஷயமே. இருவரும் நட்பாக இருந்த போதிலும் திரையில் ஒன்று சேர்ந்து நடித்த திரைப்படங்கள் ஒரு சில படங்கள் மட்டுமே.
இது போன்ற நிலையில் ரஜினி தற்போது தலைவர் 170 என்று திரைப்படத்தில் நடித்து வருகிறார் மற்றும் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இந்த இரு படங்களும் விரைவில் திரையில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் கமல் தனது பிறந்தநாள் விழா மேடையில் ரஜினியை பார்த்து, "இவர் சினிமாவை விட்டு விலகுவதாக கூறுகிறார். ஐயா நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை, நான் இல்லை என்றால் நீங்கள் இல்லை" என்று வெளிப்படையாக பேசியிருந்தார். இந்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்தது.
இதனை அடுத்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, இந்த வீடியோவை குறித்து "கமல் இல்லாவிட்டால் ரஜினி சாமியாராக சென்று இருப்பார். கமல் தடுத்ததால் தான் ரஜினி தற்போது திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி ரஜினி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362