தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜாதியை கேட்பாங்க, இனி நான் செல்லும் இடமெல்லாம் பாடுவேன் - சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணா.!

ஜாதியை கேட்பாங்க, இனி நான் செல்லும் இடமெல்லாம் பாடுவேன் - சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணா.!

Vijay TV Super Singer Aruna about Caste in Tamilnadu  Advertisement

 

சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி மூலமாக பல திறமையாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை எட்டு சீசன்களை கடந்துள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது, ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைத்தது. 

இந்த சீசனில் அருணா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் உட்பட 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதியான நிலையில், முதலில் இருந்து சிறப்பாக பாடி வந்த மயிலாடுதுறை சார்ந்த அருணா சூப்பர் சிங்கர் 9-வது சீசன் டைட்டிலை வென்றார். 

tamil cinema

அவருக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இதற்கிடையில் அருணா வீடியோ ஒன்றில் பேசுகையில், "நான் கோவில்களில் பாடச் சென்ற சமயத்தில், பாடி முடித்த பின்னர் சிலர் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் என்ன ஜாதி? என்பது தான். 

அதனை வெளியே கூறினால் நம்மை அடுத்து பாட விட மாட்டார்கள் என்ற பயம் எனக்கு இருக்கும். அதனால் வெளியே சொல்லாமல் நான் தவித்து பயந்தேன். இனி உலகின் எந்த மூலையில் சென்றும் நான் பாடுவேன். எனக்கு பயம் கிடையாது" என தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #cinema news #vijay tv #super singer aruna #சூப்பர் சிங்கர் அருணா #சினிமா செய்திகள் #தமிழ் சினிமா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story