திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவி செம ஹிட் சீரியல்! ஏன்? என்னாச்சு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் கைவிடப்படவில்லை என்றும் அது விரைவில் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கும் என்றும் விஜய் டிவி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சினிமாக்களை விட சீரியல்களுக்கே பெருமளவில் ரசிகர்களாக உள்ளனர். மேலும் பலர் சீரியல்களுக்கு அடிமையாகவே உள்ளனர் என கூறலாம். ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் அந்த எபிசோட்டை இணையத்தில் தேடிப் பார்க்கும் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் "தேன்மொழி BA." பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலின் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். திடீரென எந்தஒரு அறிவிப்பும் இன்றி இந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் இந்த சீரியல் முடிந்துவிட்டதா என் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் விஜய் டிவி இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது. அந்த பதிவில், "சிரமத்திற்கு வருந்துகிறோம். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தேன்மொழி B. A. தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362