ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..! கோபியை வீட்டை விட்டு துரத்திய பாக்கியா.. மாஸ் சஸ்பென்ஸுடன் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரமோ..!
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..! கோபியை வீட்டை விட்டு துரத்திய பாக்கியா.. ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் சஸ்பென்ஸுடன் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரமோ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான சீரியல் என்றால் அதில் பாக்கியலட்சுமி தொடரும் இருக்கும். இத்தொடர் சமீபமாக விறுவிறுப்புடன் செல்லும் நிலையில், பாக்யலட்சுமிக்கு துரோகம் இழைத்த கோபி செய்யும் செயலின் எதிர்வினை என்னவாகும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், விஜய் டி.வி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள பாக்கியலட்சுமி தொடரின் ப்ரமோவில் "பாக்கியலட்சுமியை வெளியேற்றுவதாக நினைத்து பெட்டியை எடுத்து கோபி வெளியே போட, அதில் கோபியின் உடைகள் இருக்கின்றன. இதனைக்கண்டு அதிர்ச்சியாகும் கோபி நான் வெளியே செல்ல வேண்டுமா?.
என் துணிகளை எப்படி நீ எடுத்து வைப்பாய்? என்று கைகளை ஓங்குகிறார். உடனடியாக தாத்தா ராமமூர்த்தி தனது மகன் கோபியின் கைகளை பிடித்து கண்டிக்க, அதுவரை பொறுமையின் சிகரம்போல பேச இயலாதது நின்றுகொண்டு இருந்த பாக்கியலட்சுமி, நீ வெளியே செல். நான் எதற்காக வெளியே செல்ல வேண்டும்?.
காலம்காலமாக ஆண்கள் தவறிழைக்கும் சமயத்தில் பெண்கள் எதற்காக வெளியே செல்லவேண்டும்" என்று கேட்கிறார். இதோடு பிரமோ நிறைவு பெறுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362