கூட்டத்தில் ஒருவனாக நின்ற என்னை பார்த்ததும்... தூத்துக்குடி ஏர்போர்ட்டில் விஜய் செய்த அந்த ஒரு விஷயம்! நெகிழ்ச்சி வீடியோ இதோ...!!!
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் விஜய், பழைய நண்பர் ஸ்ரீமனை கூட்ட நெரிசலிலும் கண்டுபிடித்து அணைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான , அரசியல் பணிகளில் பிஸியாக இருந்தாலும் பழைய நட்புகளை மறக்காதவர் என்பதற்கான ஒரு சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதை வெளிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் கூட்ட நெரிசல்
தகவலின்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒருமுறை விஜய் வருகைக்காக ரசிகர்கள், ஊடகங்கள், வாகனங்கள் என பெரும் திரளாக கூடினர். விமான நிலையம் முழுவதும் நெரிசல் நிலவியது. அந்த நேரத்தில், ஸ்ரீமன் அமைதியாக ஒரு ஓரமாக நின்றிருந்தார்.
கூட்டத்திலும் நண்பனை கண்ட விஜய்
பாதுகாப்பு வளையங்களை கடந்து வேகமாக நடந்துவந்த விஜய், கூட்டத்தின் நடுவே இருந்த ஸ்ரீமனை கவனித்ததும் உடனே நின்றார். பின்னர் அவரிடம் சென்று அன்புடன் கட்டிப்பிடித்து, நலம் விசாரித்தார். “என்னடா இங்க? நல்லா பண்ணு” என்று கூறிய அவர், பழைய நட்பை வெளிப்படுத்திய விதம் அங்கே இருந்தவர்களையும் கவனிக்க வைத்தது.
நெகிழ்ச்சியடைந்த ஸ்ரீமன் – வைரலான வீடியோ
பெரிய நிலைமையில் இருந்தாலும் நண்பர்களை மதிக்கும் அந்த எளிமை தான் மனதை நெகிழ வைத்ததாக ஸ்ரீமன் தெரிவித்துள்ளார். “இந்த மனசு எல்லாருக்கும் வராது” என்று அவர் பாராட்டிய இந்த viral video தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் விஜயின் இந்த simplicity குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!