×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பசும்பொன் தேவரை பற்றி அப்படி பேசினாரா? ஏர்போர்ட்டில் எட்டி உதைத்தவர் யார்? உண்மையை உடைத்த விஜய் சேதுபதி!!

பசும்பொன் அய்யாவை பற்றி அப்படி பேசினாரா? ஏர்போர்ட்டில் என்னதான் நடந்தது? உண்மையை உடைத்த விஜய் சேதுபதி!!

Advertisement

கடந்த 3ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் சென்ற விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து பின்னால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த நபர் விஜய் சேதுபதியை உதைக்கவில்லை எனவும், அவரது உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் பரவியது.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விஜய் சேதுபதியை தாக்கிய நபர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், தனது பெயர் மகா காந்தி என கூறியுள்ளார். மேலும் அவர் தான் விமானத்தில் தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அதற்கு அவர், இது ஒரு தேசமா என கேட்டார். பின்னர், குருபூஜைக்கு வந்தீர்களா என்று கேட்டதற்கு, யார் குரு? என கேட்டதாக கூறியுள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுக்க கேட்டநிலையில் அவருடன் வந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு  என்னை தாக்கினர். அதனால்தான் தான் திரும்ப தாக்கினேன். அவர்கள் என்னை தாக்கியதற்கான சிசிடிவி வீடியோக்களை பெற்று அதனை நிரூபிப்பேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி, பெங்களூரு விமான நிலையத்தில், போதையில் ஒருவர் என்னிடம் பேசினார். அப்பொழுது நான் பிறகு பேசலாம் என கூறினேன். அதற்கு அவர் நீ என் ஜாதிதான். நானும் நடிகன்தான் என பேசினார். வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் வீடியோவில் பேசியது தவறு. நான் பசும்பொன் அய்யா குறித்து எதுவும் பேசவில்லை. தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathi #attack #airport
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story