×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நேரில் பார்த்தா அறைஞ்சுடுவேன்.! ஏன் இந்த கோபம்? வனிதா யாரை சொல்லிருக்காருனு பார்த்தீங்களா!!

நேரில் பார்த்தா அறைஞ்சுடுவேன்.! ஏன் இந்த கோபம்? நடிகை வனிதா யாரை சொல்லிருக்காங்க தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் வனிதா. அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளாவார். அவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் இருவரும் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

தொடர்ந்து வனிதா 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெய்ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்கவில்லை. 

சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா தற்போது சினிமா, பிசினஸ் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் வனிதா மற்றும் ஆகாஷின் மகனான விஜய் ஸ்ரீ ஹரியிடம் நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில், நீங்கள் வனிதாவோட பையனா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் ஆகாஷோட பையன் ப்ரோ என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வனிதாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், அது உண்மைதானே. அவனுக்கும் எனக்கும் எந்த மனஸ்தாபமும் கிடையாது. நேரில் பார்த்தால் பளாரென அறைந்துவிடுவேன். அவர் ஆள்தான் வளர்ந்திருக்கிறான், அறிவு வளரவில்லை, ரெண்டும் லூசுதான். அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என கூறியுள்ளார்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha #Vihay srihari #scold
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story