வனிதாவின் அதிரடி முடிவால் சோகத்தில் முழ்கிய ரசிகர்கள்..!
Vanitha deactivate his twitter account

தமிழ் சினிமாவில் 80களில் ஹுரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. அதன்பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி வனிதாவின் வாழ்க்கையையே மாற்றிய ஒரு நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளர் வாய்ப்பை தட்டி சென்றதன் மூலம் புதிதாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது தனது மூன்றாம் திருமணம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மூன்றாம் திருமண சர்ச்சையால் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி போன்ற பிரபலங்களுடன் சமூக வலைத்தளத்தில் சண்டைகள் தொடர்ந்து எழுந்தது.
மேலும் லட்சுமியுடன் ட்வீட்டரில் சண்டையை தொடங்கிய வனிதா தற்போது திடீரென தனது ட்விட்டரை அக்கவுண்ட்டை டீ ஆக்டிவேட் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இவர்களது சண்டைகளை பார்த்து வந்த ரசிகர்களுக்கு வனிதா எடுத்த இந்த திடீர் முடிவு வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.