வைரமுத்து பிரச்னை குறித்து மவுனம் காத்துவந்த அவரது குடும்பம்!. திடீரென அவர் மகன் செய்த செயல்!. அதிர்ச்சியில் திரையுலகினர்!.
vairamuthu son angry
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசிவந்தனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக ஒரு கானொளியில் மறுப்புத் தெரிவித்துவிட்டு வைரமுத்துவும் அமைதியாகி விட்டார். சின்மயி மற்றும் அவரது தாயார் தொலைக்காட்சிகளில் தோன்றி இது சம்பந்தமாக விளக்கமளித்தனர். வைரமுத்து மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் பாடகி சின்மயி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வைரமுத்து-சின்மயி விவகாரம் தொடர்பான விவாதத்தில் இதுநாள் வரை மௌனம் காத்துவந்த பாடாலாசிரியர் மதன் கார்க்கி தனது தந்தைக்கு ஆதரவாக தற்போது ஒரு பாடலை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக வைரமுத்துவின் குடும்பத்தாரிடம் இதுவரை இருந்து எந்த எதிர்வினையும் வராமல் இருந்தது.
ஆனால் இப்போது தன் தந்தை மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பாடலாசிரியர் மதன் கார்க்கி லிங்கா படத்தில் ரஜினிக்காக வைரமுத்து எழுதிய உண்மை ஒருநாள் வெல்லும் பாடலைப் பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த பாடலில் வரும் வரிகளான “பொய்கள் புயல்போல் வீசும்- ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” என்று தனது தந்தைக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362