×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தற்கொலை செய்துக் கொள்ளாமல் காப்பாற்றியது வடிவேலு தான்" - மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி.!

தற்கொலை செய்துக் கொள்ளாமல் காப்பாற்றியது வடிவேலு தான் - மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி.!

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னண இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு  இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். திரைப்படத்தில் அனைவரது நடிப்பு மற்றும் பின்னணி இசை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது அதில் பேசிய மாரி செல்வராஜ் தன் வாழ்வில் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருக்கிறார். அப்படி ஒருமுறை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக  கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது டிவியில் வடிவேலு நிகழ்ச்சியை பார்த்தாராம்.



அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தையே கைவிட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தற்கொலை முயற்சியை கைவிட்டு விட்டாராம். அன்று தன்னைக் காப்பாற்றியது  வடிவேலுவின் நகைச்சுவை தான் என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnews #cinema #mariselvaraj #Vadivelu #Mamannan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story