×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர் மாரி செல்வராஜுக்காக வைகைபுயல் வடிவேலு செய்த காரியம்! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!

இயக்குனர் மாரி செல்வராஜுக்காக வைகைபுயல் வடிவேலு செய்த காரியம்! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பின் பல தடைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது இயக்குனரும், எழுத்தாளருமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மாரி செல்வராஜ்  எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற இரு நூல்களும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மாரி செல்வராஜ் தற்போது 'உச்சினியென்பது' என்ற நூலை எழுதியுள்ளார். முதல் கவிதைத் தொகுப்பாக உருவாகியுள்ள இந்த நூலை 
வெய்யிலின் கொம்பு பதிப்பகம் வெளியிடுகிறது.

இந்த நூலை மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைப்புயல் வடிவேலு வெளியிட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த கவிதை தொகுப்பு அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #Mari selvaraj #book
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story