×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு அதிரடி புகார்! நடந்தது என்ன?

Vadivelu complaint on manobala and singamuthu

Advertisement

நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலப்பிரச்சினை இருந்து நீதிமன்றம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திவரும் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றில்,  நடிகர் சிங்கமுத்துவிடம் வடிவேலு குறித்து கேட்டபோது அவர் தரக்குறைவாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும், பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

மேலும்  அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நிலமோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivel #Singamuthu #manobala
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story