யார் இந்த நீயா நானா கோபிநாத்? விஜய் டிவியில் சேருவதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா?
Unknown facets of neeya naana gopinath
விஜய் டிவி என்றாலே அதில் வேலைசெய்பவர்கள் பிரபலமாகிவிடுவார்கள் என்று அனைவரும் நினைத்து வருகின்றனர். அதற்கு உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் சந்தானம், ரோபோ சங்கர் இன்னும் பலபேர் உள்ளனர்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நீயா நானா கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தவர்தான் கோபிநாத். BBA படிப்பை முடித்து வேலை தேடி சென்னை வந்துள்ளார். திரையுலகம் மீதுள்ள ஆர்வத்தில் பல சேனல்களில் வாய்ப்பு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து மார்க்கெட்டிங் வேலையை செய்துள்ளார். பிறகு நிறைய சின்ன சின்ன வேலையை பார்த்துள்ளார் .
அதன் பிறகு கோபிநாத் ரேடியோ சேனலில் ஆர்ஜெவாக வேலை செய்தார். பிறகு அவரின் திறமையை பார்த்து ராஜ்டிவியில் செய்தியாளராக பணிபுரிந்தார்.அதன் பிறகு அவரின் திறமையை பார்த்து விஜய் டிவியில் குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககூறினர் .
அதன் பிறகுதான் நீயா?நானா?என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்தாக இருந்த இவர் இப்பொழுது நீயா ?நானா? கோபிநாத்தாக மாறி உள்ளார் .இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதில் கடைசியாக நடிகர் ஜீவாவின் திருநாள் திரைப்படத்தில் போலீசாராக முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362