கையும், களவுமாக சிக்கிய டிக்டாக் ரவுடி பேபி சூர்யா! அதிரடியாக கைது செய்த போலீசார்! என்ன வேலை செய்துள்ளார் தெரியுமா?
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் படு கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு குறுகிய காலத்திலேயே பிரபலமானார். பின்னர் இவரை ரவுடி பேபி என்று அழைத்தனர். இந்நிலையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், காவல் ஆணையர் லோகநாதன் அவர்களின் உத்தரவை தொடர்ந்து திருச்சியில் பல பகுதிகளில் உள்ள பல்வேறு பியூட்டி ஸ்பாக்களில் விபச்சார தடுப்பு தனிப்படை போலீசார்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் டிக்டாக் ரவுடி பேபி சூர்யா உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. . ஆனால் டிக் டாக் சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை.தனக்கும் இந்த மையத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனாலும், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு போலீசார்கள் இதுகுறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362