அவரை நினைத்து பெருமையா இருக்கு.! பிக்பாஸ் பிரபலம் குறித்து திருமாவளவன் நெகிழ்ச்சி.! என்ன கூறியுள்ளார்!!
அவரை நினைத்து பெருமையா இருக்கு.! பிக்பாஸ் பிரபலம் குறித்து திருமாவளவன் நெகிழ்ச்சி.! என்ன கூறியுள்ளார்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும், பத்திரிகையாளருமான அவர் பிக்பாஸ் வீட்டில் யார் என்ன தவறு செய்தாலும் அதனை எதிர்த்து முதல் ஆளாக தட்டி கேட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைதளப்பக்கத்தில் பரவும் சாதி மதவெறிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தும், பழங்குடியின மக்கள், பெண்கள், திருநங்கைகள் என பலருக்கும் ஆதரவாகவும் பேசி வருகிறார். மேலும் அண்மையில் அவர் அண்ணல் அம்பேத்கருக்கு கடிதம் எழுதியது குறித்து பேசி கமல் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் விக்ரமன் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், என்னால் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் விக்ரமனின் பேச்சு,விமர்சனங்கள் குறித்து ஸ்க்ரீன் ஷாட் மூலமாக தோழர்கள் எனக்கு அனுப்புகின்றனர். பிக்பாஸிலிருந்து எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. போகலாமா என விக்ரமன் என்னிடம் கேட்டார். நான் தாராளமாக செல்லுங்கள் என கூறினேன். அவர் தனது அரசியல் அடையாளத்தை எந்த இடத்திலும் மறைக்கவில்லை. எனக்கு மகிழ்ச்சி. மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362