#BREAKING: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி மாரடைப்பால் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!!!
மறைந்த தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி (86) சென்னையில் மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மறைந்த தெலுங்குத் திரைப்பட நடிகர் சோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி (86), சென்னையில் மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தகுமாரி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனினும், மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இதையும் படிங்க: BREAKING : 84 வயதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்! மறக்க முடியாத படைப்பாளர் இன்று மறைந்தார்.... கண்ணீரில் ரசிகர்கள்..!!!
சோபன் பாபுவின் திரையுலகப் பயணம்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய சோபன் பாபு, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். தமிழிலும் 'வஞ்சம்', 'சூதாடி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர், இரு மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
சாந்தகுமாரி மறைவுக்கு இரங்கல்
சாந்தகுமாரியின் மறைவுச் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: # BREAKING : அதிர்ச்சி... பிரபல நடிகர் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்....! பெரும் சோகத்தில் திரையுலகினர்.!!!