×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்தடுத்து சிக்கிய தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள்.. வருமானவரித்துறை சோதனையில் பகீர்..!

அடுத்தடுத்து சிக்கிய தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள்.. வருமானவரித்துறை சோதனையில் பகீர்..!

Advertisement

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்களின் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை செய்தனர். 

அத்துடன் மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் கலைபுலி தாணு, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையின் மூலமாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

அத்துடன் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #tamil cinema #Cinema Producer #Kalaipuli S Dhanu #Anbuchezhiyan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story