×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அது குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல.. கமலை தொடர்ந்து ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யா! ஏன், எதற்கு தெரியுமா?

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர்

Advertisement

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த மாதம், ஒளிப்பதிவு சட்டவரைவில் சில திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், அவற்றில் புதிதாக சில அம்சங்களை இணைத்து இருப்பதாகவும் அறிவித்திருந்தது. மேலும் அந்த புதிய சட்டம் குறித்த கருத்தை ஜூலை 2-ஆம் தேதி வரை மக்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் படைப்பாளிகளில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என பலரும், இந்த சட்டவரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இந்த புதிய ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் , சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என பதிவிட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#surya #cinemagaraph #kamal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story