பரபரப்புக்கு மத்தியிலும், ரசிகருக்காக நடிகர் சூர்யா என்ன காரியம் செய்துள்ளார் பார்த்தீங்களா? வைரலாகும் வீடியோ!!
surya take selfie with fan
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டி. ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர் பிரபு ஆகியோரின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிகை ராகுல் பிரீத் சிங் சாய்பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் வரும் மே 31ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெளியிடுவதற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் என் ஜி கே படத்தின் தெலுங்கு பிரமோஷன் விழாவிற்காக நடிகர் சூர்யா நேற்று ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். அப்பொழுது அவர் ரசிகர்கள் மத்தியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் பல பாதுகாப்புவீரர்களையும் தாண்டி சூர்யாவை காண்பதற்காக மேடைக்கு வந்துள்ளார்.
மேலும் அவரை பலரும் தடுத்தநிலையிலும் அவர் சூர்யாவுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் ஒருவித பதற்றத்தில் அவரால் செல்பி எடுக்க முடியவில்ல. இந்நிலையில் நடிகர் சூர்யா அவரது செல்போனை வாங்கி அவரே செல்பி எடுத்துள்ளார் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362