திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையில் ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா; என்ன படம் தெரியுமா?
surya - jothika new flim kaka kaka2
திருமணத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியினர் காக்க காக்க-2 படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் அனைத்து முண்ணனி நடிகர்களுடன் நடித்துள்ள ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி நல்ல மனைவியாகவும் மருமகளாகவும் மட்டுமே இருந்து வந்தார். சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு ஜோதிகா 2015 ஆம் மீண்டும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். முன்பு போல் இல்லாமல் தன் கதாபாத்திறத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாய் தேடி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, நாச்சியார், காற்றின் மொழி போன்ற படங்கள் பல பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா & ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் இரண்டாவது பாகத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதிலும் சூர்யா & ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362