அச்சோ.. இப்படி ஆகிருச்சே! சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
அச்சோ.. இப்படி ஆகிருச்சே! சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோதான் சர்வைவர். 90 நாட்கள் நிறைந்த இந்த போட்டியில், உயிரையும் பணயம் வைத்து செய்யும் வகையில் கடினமான பல சவால்கள் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, நந்தா, விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், வெனஸ்ஸா க்ரூஸ், அம்ஸத் கான், சரண், சிருஸ்டி டாங்கே, பெசன்ட் ரவி, பார்வதி விஜே, காயத்ரி ரெட்டி, ராம் சி, லேடி காஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, இந்திரஜா, இனிகோ பிரபாகர் உள்ளிட்ட 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் இதில் அனைத்து சவால்களையும் தகர்த்தெறிந்து
விஜயலட்சுமி வெற்றி பெற்று ஒரு கோடி பரிசை தட்டிச் சென்றார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் எதுவும் ஈசியாக கிடைத்து விடாது என பதிவிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் காலில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதனைக் கண்ட நெட்டிசன்கள் ஒரு கோடி சும்மா கிடைக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362