பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! தேசிய அளவில் ட்ரெண்டாகும் வீடியோ!
பிக்பாஸில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்ற அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் ஆரவார வரவேற்பு அளித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்றது, இதில் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட்டான நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து மிகவும் உற்சாகத்துடன் தனது வீட்டிற்கு சென்ற அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தார்கள் ஆரத்தி எடுத்து மாலை போட்டு ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தாரை கண்ட அர்ச்சனா இன்ப அதிர்ச்சியில் கணவர், தனது மகள் சாராவை கட்டியணைத்து முத்தமழை பொழிந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தேசிய அளவில் தீயாய் பரவி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362