அப்பாவானார் சூப்பர் சிங்கர் பிரபலம்! உற்சாகத்துடன் அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்! குவியும் வாழ்த்துக்கள்!
Super singer divakar blessed with boy baby
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மத்தியில் பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் மற்றும் வெற்றிபெறும் போட்டியாளர்கள் அனைவரும் தமிழ் சினிமா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் மாபெரும் பாடகர்களாக வலம் வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது குரலால் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் திவாகர். இவர் 2014 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் டி.இமான் இசையில் வெளியான பஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார்.
அதன்பிறகு அவர் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வாரேன் வாரேன் சீமராஜா பாடலையும், நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு படத்தில் இண்டெர்நெட் பசங்க பாடலையும் பாடியுள்ளார்., மேலும் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகளை பெற்று பல படங்களில் பாடி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அபி என்ற பெண்ணை இசையமைப்பாளர் இமான் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திவாகர் மற்றும் அபி தம்பதியினருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திவாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தந்தை எனக்கு மகனாகப் பிறந்து உள்ளார் என உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362