சூர்யா ரசிகரா நீங்கள்? சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்..!!
சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து தொடர் கொண்டாட்டங்களே..!
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் 3டியில் வரலாற்றுப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ‘வாடிவாசல்’. இருப்பினும், இருவரின் முந்தைய கமிட்மென்ட் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையில், சுதா கொங்கராவின் அடுத்த படப்பிடிப்பை சூர்யா விரைவில் தொடங்கவிருப்பதால், 'வாடிவாசல்' படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என்று சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வந்தன.
வாடிவாசல் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் கழித்து மார்ச் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என தகவல்கள் பரவலாக தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட பணியை தொடங்கும் முன் சில மாதங்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362