×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொண்டு நிறுவன பெயரில் உல்லாச வாழ்க்கை.! கையும் களவுமாக சிக்கிய செம்பருத்தி நடிகர்! வெளியான பகீர் பின்னணி!!

srmparuthi serial actress money fraud

Advertisement

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பிரபல தனியார் தொண்டு நிறுவனஅடையாள அட்டை அணிந்த இருவர் ஏழை சிறுவர், சிறுமிகளின் கல்வி சேவைக்கு உதவுங்கள் என கூறி பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்துள்ளனர்.

அப்பொழுது அப்பகுதிக்கு வந்த தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்யும் நபர்கள் தங்களது தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் தங்களது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம்  பறிப்பவர்களை குறித்து ரகசியமாக  போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து உரிய சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்

அப்பொழுது சைபலிகான் மற்றும் கவுதம் இருவரும் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து, அதன் மூலம் உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.மேலும் இவர்களில் சைபலிகான் செம்பருத்தி, பகல்நிலவு, மற்றும் வள்ளி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#semparuthi #sheif alikhan #fraud
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story