ஐயோ! அழாதே.. அருவெறுப்பா இருக்கு! பிக்பாஸ் வீட்டில் கதறிகதறி அழுத அனிதா! கடுப்பான பிரபல முன்னணி நடிகை! யார்னு பார்த்தீர்களா!
பிக்பாஸிலிருந்து சனம் வெளியேறியதால், கதறிகதறி அனிதா அழுதது குறித்து பிரபல நடிகை டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும் கடந்த வானம் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியுடன் நெருங்கி பழகி வந்த அனிதா, கண்ணீர்விட்டு கதறி கதறி அழுதார்.
இதனை கண்ட ரசிகர்கள் அவரை நினைத்து வருத்தப்பட்டும், சிலர் அனிதா நடிப்பதாகவும் கூறி வந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஸ்ரீ பிரியா, தனது டுவிட்டரில் அனிதா அழுதது குறித்து, அய்யோ,தயவு செஞ்சு அழாத... அருவருப்பா இருக்கு’ என பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் சிலர் ஆதரித்தும், எதிர்த்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362