×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஸ்ரீ ரெட்டியின் அதிரடி முடிவால் கலக்கத்தில் இருக்கும் திரையுலகம்.,மொத்தமாக அம்பலமாகப்போகும் ரகசியங்கள்.!

ஸ்ரீ ரெட்டியின் அதிரடி முடிவால் கலக்கத்தில் இருக்கும் திரையுலகம்.,மொத்தமாக அம்பலமாகப்போகும் ரகசியங்கள்.!

Advertisement

தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றசாட்டி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

மேலும் அதோடு நிறுத்தாமல், சென்னையில் தங்கி இருக்கும் அவர் இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் ஆதி ஆகியோர் மீதும் புகார்களை கூறி இருக்கிறார்.

இதனையடுத்து, கடந்த ஜூலை 27 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ''இயக்குனர் வாராகி என்னை விலை மது என்று கூறியுள்ளார். இதனால் அவர் மீது பெண் வன்மை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தன்னுடைய வாழ்க்கையில், அவருக்கு நடந்த சம்பவங்களை திரைப்படமாக  எடுக்க இருக்கிறார். இந்த படத்தை 'தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன்', 'ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளது.

அலாவுதீன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், அத்தனை பேரின் பட்டியலும் பெரிய திரையில் வந்துவிடும் என்பதால், திரையுலகத்தில் பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srireddy #movie #life history
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story