×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Spb in critical condition hospital report

Advertisement

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் நாளடைவில் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.  
அதனை தொடர்ந்து அவர் பேச தொடங்கியுள்ளார். முழுவதும் சுயநினைவு திரும்பிவிட்டது. மருத்துவர்கள் உதவியுடன் உட்கார்ந்து இருக்கிறார். உணவு எடுத்துக் கொள்கிறார். கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என நாள்தோறும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தகவல் வெளியிட்டு வந்தார்.


இவ்வாறு பாடகர் எஸ்.பி.பியின்  உடல்நலம் நன்கு தேறி வந்தநிலையில் தற்போது திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக மிகவும் மோசமாகி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #SPB #Critical
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story