×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்பிபியின் தற்போதைய நிலை! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

Spb health condition got improvement

Advertisement

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சில நாட்களாக அவரது உடல்நலம் சீராகி நல்ல முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது. மேலும் நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்ரமணியன் செயற்கை சுவாச கருவி மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் விழிப்புடன் உள்ளார் சொல்வதை அனைத்தையும் புரிந்து கொள்கிறார். மேலும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து எஸ்பிபி யின் மகன் சரணும் தனது தந்தையின் உடல்நலம் தேறி வருவதாகவும், நுரையீரல் செயல்பாட்டில் முந்தைய இரண்டு நாட்களைவிட தற்போது  முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#SPB #corono #health condition
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story