×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுயநினைவு திரும்பிடுச்சு..! எஸ்.பி.பி இப்போ நல்லா இருக்கார்..! மருத்துவமனை கூறிய நல்ல தகவல்.!

SPB Current health condition latest update

Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தற்போது நலமா இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் கடந்த 14ஆம் தேதி முதல் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. 

உயிர் காக்கும் எக்மோ கருவி மற்றும் வெண்டிலேட்டர் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் தினமும் வெளியான மருத்துவ அறிக்கை அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவே தெரிவித்தது. 

இதனால் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அவர் மீண்டும் குணமடைந்து நலமுடன் திரும்ப வேண்டுமென அவருக்காக பிரார்த்தனை செய்ய தொடங்கினர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சற்று சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் ஆகியோர் தெரிவித்து வந்தனர். தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையின்படி எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு சுய நினைவு வந்துள்ளதாகவும், மருத்துவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் வகையில் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story