×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எழுந்து அமர்ந்தார் பாடகர் எஸ்.பி.பி! தந்தை குறித்து நல்ல செய்தியை வெளியிட்ட எஸ்.பி.சரண்!

SP charan post video about her father spb health condition

Advertisement

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனாவிலிருந்தும் மீண்டுள்ளார். இந்த நிலையில் பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி. சரண் தகவல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் சிறிது பேச தொடங்கியுள்ளார். அவருக்கு முழுவதும் சுயநினைவு திரும்பிவிட்டது. அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை நடைபெறுகிறது என கூறியுள்ளார். 

மேலும் தந்தை சுறுசுறுப்புடன் உள்ளார். இன்று நல்ல விஷயமாக தந்தை அமர்ந்துள்ளார். மருத்துவர்கள் எனது தந்தையை உட்கார வைத்தனர். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் உதவியுடன் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார். அவர் உடல் சீராகி அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#SPB #sp charan #health condition
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story