எந்தவொரு பந்தாவும் இல்லாமல் விசேஷத்தை அழகாக கொண்டாடிய சிவகார்த்திகேயன் குடும்பத்தினர்! வைரல் வீடியோ...
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் 15ஆம் ஆண்டு திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடிய காணொளி வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் கொண்டாடிய இனிய தருணங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. திரைப்பட உலகின் பிஸியான தருணங்களிலும் அவர் தனது குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி
சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் தனது திறமையின் மூலம் உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் வெளியான அமரன் படம் அந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து ‘மதராஸி’, ‘பராசக்தி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
திருமண நாள் கொண்டாட்டம்
சிவகார்த்திகேயன், 2010ஆம் ஆண்டு தனது மாமனார் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா, குகன் என இரண்டு குழந்தைகளும், கடந்த ஆண்டு பிறந்த பவன் எனும் மூன்றாவது மகனும் உள்ளனர். சமீபத்தில் தனது மனைவியுடன் 15ஆவது திருமண நாளை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய காணொளியை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மகளின் பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டாமாக நடத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! வைரல் வீடியோ....
வைரலான காணொளி
“நீ எப்போதும் என்னுடையவனாக இருப்பாய்..” என்ற வாசகத்துடன் வெளியான அந்த வீடியோவில், தம்பதியரின் அன்பை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. அந்த பதிவுக்குக் கீழ் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா மற்றும் குடும்பம் ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ரசிகர்களிடமும் குடும்ப பாசத்திலும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இதையும் படிங்க: துவக்கமும் நீங்கதான், முடிவும் நீங்கதான்! 63 வயதை எட்டிய நடிகை ராதிகா! அம்மாவுக்கு மனதை உருக்கும் காணொளி வெளியிட்ட மகள்! வைரல் வீடியோ...