தனது நான்கு வயது மகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் நடிகர் சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan introduce his daughter Aarathana to tamil movie as a singer

புதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனவை திரையுலகில் அறிமுகப்படுத்துகிறார் நடிகர் சிவகார்த்திக்கேயன். ஹீரோவாக கலக்கி வந்த சிவகார்த்திக்கேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும்படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகர், நடிகர் அருண்ராஜா இயக்கம் இப்படத்தில், நடிகை ஐஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். இதில், இசையமைப்பாளர் அனிரூத் ஒரு நாட்டுப்புற பாடலை பாடியுள்ளாராம்.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து ‘கனா ‘ படம் மூலம் தனது 4 வயதுடைய மகள் ஆராதனவை திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார். படத்தில் ஆராதனை தனது தந்தை சிவகார்த்திக்கேயன் மற்றும் வைக்கோம் விஜலக்ஷ்மியுடன் இணைந்து ‘ வாயாடி பெத்த புள்ள ‘ என்ற பாடலை பாடியுள்ளாராம். இதன் மூலம் ஆராதனா பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.