வாவ்.. கியூட் பேமிலி.. அச்சு அசலாக தந்தையை உரித்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயனின் மகன்..! வைரலாக லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
வாவ்.. கியூட் பேமிலி.. அச்சு அசலாக தந்தையை உரித்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயனின் மகன்..! வைரலாக லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது பயணத்தை தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் தொடங்கிய நிலையில், தற்போது அனைவருக்கும் பிடித்த கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்களும் சூப்பர் ஹிட்டாகி கலக்கி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். அத்துடன் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்தது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சிவக்கார்த்திகேயன், 18 வருடங்களுக்கு பின், இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்.. என் மகனாக என்று பதிவிட்டிருந்தார்.
அத்துடன் அம்மாவும், குழந்தையும் நலம் என்று தனது மகன் தன் கையைப் பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது குடும்பத்துடன் பங்கேற்று இருந்தார்.
அப்போது பிரபல நடிகை சரிதா, சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் மகன் அப்படியே அச்சு அசலாக அவரை உரித்து வைத்தது போலவே இருக்கிறார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362