ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்! புகைப்படம்!
Singer SP Balasubramaniyam latest photo

SP பாலசுப்ரமணியம் என்றால் அனைவருக்கும் மிகவும் தெரிந்த ஒரு முகம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் SP பாலசுப்ரமணியம். 80 , 90 காலகட்டங்களில் இவரது குரல் ஒலிக்காத பாடல்களே இல்லை என்ற அளவிற்கு பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
இவரது இனிமையான குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதுவரை ஆறுமுறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை வாங்கியுள்ளார் SP பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் ஒரு பாடகர் என்பதையும் தாண்டி சிறந்த நடிகரும் கூட. பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராகவும் நடித்துள்ளார் SP பாலசுப்ரமணியம்.
தற்போது அதிகமான படங்களில் இவரது குரலினை கேட்க முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒருசில படங்களில் ஒருசில பாடல்களை பாடிவருகிறார் SPB . இந்நிலையில் தேர்தல் நாளான நேற்று தனது வாக்கினை பதிவு செய்த பிறகு அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் SPB .
அந்த புகைப்படத்தில் ஆள் அடையாளமே மாறி வித்தியாசமாக தோற்றமளிக்கிறார் SP பாலசுப்ரமணியம். இதோ அந்த புகைப்படம்.