×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாமே லோன்., சொந்த ஊருக்குதான் போகணும் போல - சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி உருக்கம்..!!

எல்லாமே லோன்., சொந்த ஊருக்குதான் போகணும் போல - சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி உருக்கம்..!!

Advertisement

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி. இவர்கள் பின்னாளில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ராஜலட்சுமி மற்றும் செந்தில் குரலில் வெளியாகிய பல பாடல்கள் அடுத்தடுத்து வைரலாகின. தம்பதிகள் அவ்போது வெளிநாடுகளுக்கு சென்று திரைப்பட பாடல் பாடி வருகின்றனர். 

ராஜலட்சுமி புஷ்பா திரைப்படத்தில் வெளியாகிய பாடலை பாடி இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். தற்போது அவர் லைசென்ஸ் என்ற படத்தில் நடித்தும் வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "எங்களின் தொழிலில் பல சவால்கள் இருக்கின்றன. 

இதனைத்தவிர்த்து வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது. நாங்கள் வளர்ந்து விட்டோம் என்று விமர்சனம் வருகிறது. வீடு, கார் என அனைத்தையும் லோனில் தான் வாங்கி இருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் நிகழ்ச்சி இல்லை என்பதால் கையில் பணமும் இல்லை. 

அதையும் கடந்து தான் வந்துள்ளோம். கடன் வாங்கி செலவு செய்து, அதனை தற்போது சம்பாதித்து அடைத்து வருகிறோம். கொரோனா சமயத்தில் கடனை கட்ட முடியவில்லை என்றால் என்ன செய்வது என கணவரிடம் அவ்வப்போது கேட்பேன். 

அவர் அனைத்தையும் வங்கி அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்று விடலாம் என்று கூறுவார். எங்களுக்கும் பல பிரச்சினை உள்ளது" என்று பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #cinema news #சினிமா செய்திகள் #பாடகி ராஜலட்சுமி #Singer Rajalakshmi #சூப்பர்சிங்கர் #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story