காலமே.. காலமே.! உயிரிழந்த பாடகர் பம்பா பாக்யாவின் கடைசி ஆசை!! நிறைவேறாமலே இப்படி ஆகிருச்சே! கலங்கும் ரசிகர்கள்!!
உயிரிழந்த பாடகர் பம்பா பாக்யாவின் கடைசி ஆசை!! நிறைவேறாமலே இப்படி ஆகிருச்சே! கலங்கும் ரசிகர்கள்!!
தமிழில் ராவணன் படத்தில்
இடம்பெற்ற கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் பம்பா பாக்யா. மேடைக் கச்சேரிகளில் பாடி வந்த இவரை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார். பம்பா பாக்யா எந்திரன் 2.0 படத்தில் புள்ளினங்கால் பாடலின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
தொடர்ந்து அவர் சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் படங்களிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடிய அவர் தொடர்ந்து எக்கசக்கமான பாடல்களை பாடி பெருமளவில் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பம்பா பாக்யா ரஜினி, விஜய் ஆகியோரின் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் அவர் தான் அஜித் படத்தில் பாட வேண்டும் என மிகவும் ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் அவரது ஆசை கடைசி வரை நிறைவேறாமலே அவர் உயிரிழந்தது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362