சூப்பர் சிம்பு.. நடிகர் தவசிக்கு உதவிய நடிகர் சிம்பு.. சிம்பு வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் தவசிக்கு நடிகர் சிம்பு 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் தவசிக்கு நடிகர் சிம்பு 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்திருந்தவர் நடிகர் தவசி. இந்த படத்தில் "கருப்பன் குசும்பு காரன்" என்ற இவரது வசனம் மிகவும் பிரபலம். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், "தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், தனது சிகிச்சைக்கு பிரபலங்கள் தனக்கு நிதியுதவி வழங்கவேண்டும்" எனவும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அந்த வீடியோவில் அவர் பார்ப்பதற்கு உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். முன்னதாக நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் ரூபாய் வழங்கினார். அவரை தொடர்ந்து நடிகர்கள் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் தங்கள் பங்குக்கு தலா 25,000 ரூபாய் வழங்கினர்.
தவசியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடிகர் ரஜினி நலம் விசாரித்தார். தற்போது நடிகர் சிம்பு அவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள தவசியின் மறுத்த செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362