6 மாசத்துக்கு ஒரு பெண்! ஒரு நடிகை, ஒரு விமான பணிப்பெண்... கணவனின் மன்மத லீலைகளை அம்பலப்படுத்தும் மனைவி...
Serial fame eswar mahalakshmi case update
கடந்த சில நாட்களாக அதிகம் விவாதிக்கப்படும் செய்திகளில் ஓன்று சின்னத்திரை பிரபலங்கள் ஈஸ்வர் - மகாலஷ்மி விவகாரம். தனது கணவருக்கும், பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை மகாலஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக கூறிவந்த ஈஸ்வரின் மனைவி ஜெய்ஸ்ரீ தற்போது தனது கணவருக்கு வேறு சில நடிகைகள் மற்றும் பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நடிகை மகாலஷ்மி மட்டும் இல்லாது வேறுசில சீரியல் நாடுகளுடன் தனது கணவருக்கு தொடர்பு இருந்ததாகவும், மேலும், விமான பணி பெண் ஒருவருடனும் தனது கணவர் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். 6 மாசத்திற்கு ஒரு கேர்ள் பிரென்ட் மாத்துவதே அவரது வேலை எனவும் கூறியுள்ளார்.
இதுபற்றி தான் புகார் கூறியுள்ளதால் தனக்கும், வேறொரு ஆணிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் பொய் கூறி வருவதாகவும், இந்த அணைத்து கஷ்டங்களையும் கூட தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியும், ஆனால், எனது மகள் மீது அவர் தவறான எண்ணத்தில் கைவைத்ததை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால்தான் இதுகுறித்து புகார் அளித்திருப்பதாகவும் ஜெய்ஸ்ரீ கூறியுள்ளார்.