ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.....! அதிர்ச்சியில் ரசிகர்கள்...
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.....! அதிர்ச்சியில் ரசிகர்கர்கள்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது விறுவிருப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜா ராணி2. இத்தொடருக்கென ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் ஹீரோவாக, சரவணன் கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா ஆகியோர் நடித்து வந்தனர்.
ஆனால் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக ஆலியா தொடரை விட்டு அண்மையில் விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது புதிய சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் ராஜாராணி 2 தொடரில் காமெடியான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அர்ச்சனா. இத்தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது . ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362