×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீரியலை விட்டு விலக இதுதான் காரணம்.! முதன்முதலாக உண்மையை உடைத்த நடிகர் வெங்கட்!

சீரியலை விட்டு விலக இதுதான் காரணம்.! முதன்முதலாக உண்மையை உடைத்த நடிகர் வெங்கட்!

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பால் மக்களை கவர்ந்து பிரபலமானவர் நடிகர் வெங்கட். இவர் சமீபத்தில் ரோஜா சீரியல் விட்டு விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் ஏன் விலகினார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்த அவர் கூறியதாவது,  கொரோனா காலத்தில் தனது உடல்நிலை மிக மோசமாக இருந்த நிலையில் எனக்கு இடைவெளி தேவைப்பட்டது. ஆனாலும் நான் தொடர்ந்து ரோஜா சீரியலில் நடித்து வந்தேன். ஷூட்டிங்கில் சண்டைக் காட்சியிலும் வலிகளை தாண்டி நடித்தேன். அதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எனக்கு ஆதரவு இருந்தது. 

ஆனால் சேனலில் இருந்து எந்த ஆதரவும் அளிக்கவில்லை. தான் மற்றொரு எதிர் பிரபல சேனலில் நடித்து வருவதால் பார்ஷியாலிட்டி காட்டினர். அதனால்தான் தான் ரோஜா சீரியலை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார். வெங்கட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Serail #Venkat
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story