×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூன்றாவது முறையாக கர்ப்பம்! வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய இயக்குனர் செல்வராகவனின் மனைவி! புகைப்படங்கள் இதோ!

இயக்குனர் செல்வராகவனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். அவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 

ஆனால் சமீப காலமாக இவரது படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. மேலும் அண்மையில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே திரைப்படமும் படுதோல்வியடைந்தது. 
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தனுஷ் நடிப்பில் புதுப்பேட்டை 2 இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

செல்வராகவனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் 2011ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ல் லீலாவதி என்ற மகளும்,  2013இல் ஓம்கர் என்ற மகனும் பிறந்தனர்.

இந்த நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தற்போது மீண்டும் மூன்றாவதாக கர்ப்பமாக உள்ளார். அவர் சமீபத்தில் கர்ப்பகால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Selvaragavan #Geethanjli #pregnant
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story