என் கணவர் என்னை அடிச்சு கீழே தள்ளிவிட்டார்..! தலை வீங்கிவிட்டது..! சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் உருக்கமான பேச்சு..!
Saravanan meenatchi senthil kumari speech

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சிக்கு அம்மாவக நடித்தவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரி. சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களிலும், ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் செந்தில் குமாரி.
இவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில், நடிகர் விஜய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. நான் அவரது தீவிர ரசிகை. அவரை பார்க்கவேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை.
திருப்பாச்சி படத்தில் என் சகோதரி நடித்தார். அப்போது விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு வீங்கிவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன் என அவர் கூறியுள்ளார்.