×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேறொருவருடன் தொடர்பா? கருக்கலைப்பு செய்தாரா? மனம் திறந்து உண்மையை உடைத்த நடிகை சமந்தா! கலங்கிய ரசிகர்கள்!!

வேறொருவருடன் தொடர்பா? கருக்கலைப்பு செய்தாரா? மனம் திறந்து உண்மையை உடைத்த நடிகை சமந்தா! கலங்கிய ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரிய  உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சமந்தாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் சமந்தா கணவரை விவாகரத்து செய்ய காரணம் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை, கருக்கலைப்பு செய்தார் எனப் பல தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து  பதில் அளிக்கும் வகையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், எனது தனிப்பட்ட பிரச்சினையில் என் மீது மீது அக்கறை காட்டியவர்களுக்கும், என்னைக் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு எதிராக நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை, கருக்கலைப்பு செய்துள்ளார் என பல வதந்திகள் பரவி வருகிறது. விவாகரத்து என்பது மிகவும் வலி மிகுந்தது. நான் அதிலிருந்து மீண்டு வர வேண்டும். ஆனால் தொடர்ந்து என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகின்றனர். அவர்கள் சொல்லும் எதுவும் என்னைத் தாக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story