மறக்கமுடியாத தருணம்! வேதனையில் கதறி அழுத நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?
samantha tweet about her dog
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது செல்லநாயான ஹாஷ்க்கு முதல் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். மேலும் அதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் முதன் முதலாக தான் கதறி அழுத சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதாவது சமந்தா முதலில் புகாபூ என்ற நாயை வளர்த்துள்ளார். மேலும் அதற்காக அவர் 30 நாள் வகுப்புக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த நாய் பார்வோ என்ற வைரஸ் தாக்கப்பட்டு வீட்டிற்கு வந்த நான்கு நாட்களுக்குள் இறந்துள்ளது. அதனால் சமந்தா கதறி அழுதுள்ளார்.
மேலும் இனி ஒரு நாயை வாங்கவே கூடாது என முடிவு செய்த நிலையில் சில மாதங்கள் கழித்து கணவர் சாய் இன்னொரு நாயை வாங்கியுள்ளார். அதுதான் Hash. அதற்காக நான் வீட்டை மிகவும் சுத்தம் வைத்திருந்தேன். ஆனாலும் நான் பயந்துகொண்டே இருந்தேன். தவறாக எதுவும் நடந்துவிடுமோ என பயத்தில் அழுவேன். என கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362