×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா.! நச்சுனு பதிலளித்த சமந்தா.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்தாரா.! நச்சுனு பதிலளித்த சமந்தா.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணமாகி 4வது மாதத்திலேயே இருவரும் இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகிவிட்டதாக அறிவித்தனர்.

மேலும்  வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விஷயம் பெரும் விவாத பொருளானது. இதுகுறித்து விசாரணை நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வாடகை தாய்க்கு பதிவு செய்துவிட்டதாகவும் ஆதாரங்களுடன் அறிவித்தனர். மேலும் இருவரும் விதிமீறல் செய்யவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் யசோதா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவிடம் இதுகுறித்து  கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், எதைபற்றியும் என்னால் எந்த கருத்தும் சொல்ல முடியாது. நீங்கள் ஒன்று சொன்னாலும் உடனே நான் அதனை மாற்றிகொள்வேன். அவர்களுக்கு அதனால் மகிழ்ச்சி கிடைத்தால் தாராளமாக செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் அவர் வாடகைதாய் குறித்து அதிகளவில் பேசுவது யசோதா படத்திற்கு கிடைத்த இலவச மார்க்கெட்டிங் எனவும் கூறியுள்ளார். ஏனெனில் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் யசோதா திரைப்படத்தில் சமந்தா வாடகைதாயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #samantha #Yasodha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story