×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சோ.. அந்தரத்தில் தொங்கிய தளபதியின் தந்தை.! ஏன்? என்னாச்சு? தீயாய் பரவும் புகைப்படம்!!

அச்சோ.. அந்தரத்தில் தொங்கிய தளபதியின் தந்தை.! ஏன்? என்னாச்சு? தீயாய் பரவும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர்  கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய்யின் தந்தையும் ஆவார். 
எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கடந்த ஜூலை 3ம் தேதி தனது பிறந்தநாளை மனைவி ஷோபா மற்றும் உதவி இயக்குநர்களுடன்  கேக் வெட்டிக் கொண்டாடினார். 

அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், அதில் விஜய் கலந்து கொள்ளாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் விஜய் ஹைதராபாத்தில்  ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் எனது பிறந்தநாள் விழாவிற்கு வரமுடியவில்லை. தந்தை மற்றும் மகனுக்கும் இடையே இருப்பதெல்லாம் வெளியே கூற முடியாது என எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்திருந்தார்.

எஸ்.ஏ சந்திரசேகர் நீண்ட காலங்களுக்கு பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சண்டை பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு டெடிகேஷனா! தளபதிக்கே அப்பாவாச்சே என பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sa chandrasekar #shooting #Hanging
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story